பத்து ரூபாய் பிரியாணி
அது ஒரு மாலை வேளை, நான் எனது களைப்பை சற்று போக்கிக்கொள்ள தேனீர் கடையினை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். வாகனங்கள் அங்கும் இங்கும் மக்களைச் சுமந்து சென்றுகொண்டிருக்க, நமக்கு ஏதாவது சவாரி கிடைக்காதா என்று எதிர்பார்ப்புடன் Taxi ஓட்டுனர் ஒருவர் தனது காரின் முன்னே அமர்ந்திருந்தார். அந்த வழியாக தலையில் கூடையுடன் முதியவர் ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார். Taxi ஓட்டுனர் அந்த முதியவரைப் பார்த்து : என்ன இன்னிக்கி நடந்து போரீரு? என்று கேட்க, பதிலுக்கு அந்த முதியவர் : பத்து ரூபாய்க்கு பிரியாணி சாப்பிட்டேன் என்று சொன்னார். இந்த பதில் எனது காதில் விழுந்தபோது எனக்கு சற்று குழப்பமாயிருந்தது. Taxi ஓட்டுனரின் கேள்விக்கும் இந்த முதியவரின் பதிலுக்கும் பொருத்தமில்லையே என நான் நினைத்துக்கொண்டிருக்கும்போது. அந்த முதியவர் தொடர்து, கையில பத்து ரூபா இருந்திச்சி வேலையை முடிச்சிட்டு (கூலி வேலை) அப்படியே பத்து ரூபாய்க்கு பிரியாணி சாப்பிட்டேன், வயிறு நிறைஞ்சிட்டு, வீட்டுக்கு கால் நடையா நடந்து போறேன் என்று சொன்னார். அந்த முதியவரின் பதில் என்னை ஸ்தம்பிக்கச் செய்தது.
வாழ்க்கையினால் வாழ்வோருக்கு பாடம் புகட்டும் இந்த முதியவர் எத்தனை பெரிய மனிதர்?
Comments
Post a Comment