Skip to main content

மறுபக்கம்

 

 மறுபக்கம்



ஆகஸ்ட் 14, 2021, நானும் எனது மனைவியும் டெஹ்ரி ஆன் சோன் கடைவீதிக்குச் சென்றிருந்தோம். துணிக்கடைக்குள் நுழைந்த நாங்கள், மகன் ஜான் சாமுவேலுக்காக எதையாகிலும் வாங்கிச் செல்லலாம் என்ன எண்ணத்தில்,  வாலிபர்களுக்கான  மேலாடை  தொங்கவிடப்பட்டிருந்த  இடத்திற்குச் சென்றோம். சென்றதுமே பளிச் என்று ஒரு T-Shirt  -ன் முன்பக்கம்  எங்களது  கண்களில்  பட,  அதனை  உடனே  கைகளில்  எடுத்துக்கொண்டு, பணத்தையும் செலுத்திவிட்டு வீடு திரும்பினோம். வீட்டை அடைந்ததும், மகனது கைகளில் சந்தோஷமாக அந்த T-Shirt -ஐகொடுத்தபோது,  கைகளில்  வாங்கிய  அவன்  திரும்ப  எங்களது  முகத்தைப் பார்த்தான். எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை; எனினும், அதன்  பின்புறத்தை  அவன்  திருப்பிக்காண்பித்தபோதோ,  எங்களுக்கு  பேரதிர்ச்சியாயிருந்தது. ஆம், அது இரண்டாகக் கிழிந்திருந்திருந்தது. ஒருபுற அழகை மட்டுமே பார்த்துவிட்டு, மறுபுறத்தின் அலங்கோலத்தைப் பாராது வந்துவிட்டோமே என நினைத்து எங்களுக்குள் நொந்துகொண்டோம்.    

பல  வேளைகளில்  நாமும்,  ஒருபுறத்தை  மட்டுமே  பார்த்து  திருப்தியடைந்துவிடுகின்றோம்.  கண்களுக்குப்  பிரியமானவைகளைத்தெரிந்துகொண்டு, கிழிந்துபோன நிலையில் காட்சியளிக்கும் கர்த்தருக்குப் பிரியமில்லாத  அதன்  மறுபக்கத்தினைக்  காண  மறந்துவிடுகின்றோம்.  அழகென்று நாம் நினைக்கும் காரியங்களை, அலங்கோலம் என அக்கம் பக்கம் அளவிடுவதற்குக் காரணம், மறுபக்கத்தை பார்க்க நாம் மறந்ததே.    

மற்றொருநாளில்,  கிழிந்துபோயிருந்த  அந்த  T-Shirt  -டினைக் மாற்றும்படியாக நானும் மனைவியும் மறுபடியும் துணிக் கடைக்குச் சென்றிருந்தோம்.    கடையின்    வாசலில்    நின்றுகொண்டிருந்த  காவலாளியிடம், துணியினைக் காட்டி, இதனை மாற்றவேண்டும் என்று சொன்னபோது, அவர் கடையினுள் அதனைக் கொண்டுசெல்லுவதற்கான நுழைவுச்  சீட்டினை  எழுதத்  தொடங்கினார்.  நுழைவுச்  சீட்டில்  நாங்கள்  கொண்டுசென்ற   துணியைப்   பற்றிய   விபரங்களையும்,   எங்களது  கைபேசி  எண்ணையும்  எழுதிய  பின்னர்,  எல்லாற்றிற்கும்  கீழ் இரண்டு கையெழுத்துக்களை அவரே போட்டார். நான் அதனை வாங்கிப்  பார்த்தபோது,  ஒன்று  கடை  ஊழியரின்  கையெழுத்து  என்றும்,  மற்றொன்றோ  'Customer sign'  என்றும்  இருந்தது.  எங்களைக்  கஷ்டப்படுத்தாமல், அவரே என்னுடைய இடத்தில் கையெழுத்தினைப் போட்டபோது, அந்த காவலாளியின் மறுபக்கம் எனக்குத் தெரிந்தது. 

கடையின் உள்ளே சென்றதும், கிழிந்;துபோயிருந்த அந்த T-Shirt -ஐகடைக்காரரிடம்  கொடுத்தோம்.  T-Shirt  -ஐ  கைகளில்  வாங்கிய  அவர்,  முன்னும்  பின்னும்  அதனை  திருப்பிப்  பார்த்துவிட்டு,  எங்களை  நோக்கி, 'எதற்காக இதனை மாற்றுகிறீர்கள்? என்ன பிரச்சனை?' என்று கேட்டார். நாங்கள் அவரை நோக்கி, 'இதன் பின்புறம் கிழிந்திருக்கிறது' எனவே  வேறு  T-Shirt    வேண்டும்  என்று  சொன்னோம்.  அவரோ,  சிரித்தவாறு எங்களை நோக்கி, 'சார், இது மாடல் சார், இப்படித்தான் இருக்கும்,  வேண்டும்  என்றால்  இதே  போல்  இருக்கும்  மற்ற  -ஐ  பாருங்கள்'  என்றார்.  நாங்களோ  அதிர்ந்துபோனோம்,  'என்ன  மாடலா'  என மனதுக்குள் ஒருவருக்கொருவர் கேளாத சத்தத்தை மனைவியும் நானும் எழுப்பிக்கொண்டோம். உலகத்தின் பார்வையில் 'மாடலாயிருக்கும் காரியங்கள், தேவனுக்கு முன் மாதிரியாகவும், ஜனங்களுக்கு முன்மாதிரியாகவும் இராதே.'ஒருபுறம் அழகு, மறுபுறம் உலகுஎன இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்; (ரோமர் 12:2) வாழ தேவன் நம்மை வழிநடத்துவாராக. 

Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே