Skip to main content

இப்படியும் காப்பார் கர்த்தர் !

 

இப்படியும் காப்பார் கர்த்தர் !


ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை மாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை, தூத்துக்குடி ஆசிரியர் காலணியிலுள்ள சகோதரர் சுந்தர் அவர்களது இல்லத்தில் நடைபெறும் MSF ஐக்கியத்தின் வாராந்திர ஜெபக்கூடுகையில் வழக்கமாக பங்குபெறுபவன் நான். அந்நாட்களில், தூத்துக்குடியில் நான் தங்கியிருந்தபோது, வேதாகமத்தின் 'யோசுவா' புத்தகத்திலிருந்து வேதாக வகுப்புகளின் மூலமாக சத்தியங்களை தொடர்ந்து கற்றுக்கொடுத்துவந்தேன். நான் சுகவீனமாக இருந்த காரணத்தினால், சில நாட்களாக எனது மனைவியின் துணையோடு இருசக்கர வாகனத்தில் அக்கூடுகைக்குச் சென்று வருவேன். மிஷனரிகளுக்காகவும், ஊழியங்களுக்காகவும் தொடர்ந்து ஜெபித்து வரும் அக்கூடுகையில் எப்படியாகிலும் கலந்துகொள்ளவேண்டும் என்று என் மனம் அத்தினம் வந்ததும் அடித்துக்கொண்டேயிருக்கும். 

8 நவம்பர் 2016, செவ்வாய் கிழமை, என் மனைவியோ சுகவீனமாயிருந்தாள். மருத்துவமனைக்குச் சென்றுவந்து வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாள். எனவே, அன்று இருசக்கர வாகனத்தை நானே ஓட்டிச் சென்றேன். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வெளிச்சம் குறைந்த போல்பேட்டை சாலையில் நான் சென்றுகொண ;டிருந்தபோது, எனக்கு எதிரே சாலையின் இடதுபுறத்தில் இருசக்கர வாகனம் ஒன்று வருவதைக் கண்டு, யாரோ ஒருவர் இருசக்கர வாகனத்தை தவறான பக்கத்தில் ஓட்டிவருவதாக நினைத்து சற்று வலப்புறம் ஒதுங்கியவாறு சென்றுகொண்டிருந்தேன். சுமார் இரண்டு அடி அருகாமையில் வந்ததும், எதிரே வந்த இருசக்கர வாகனம் அப்படியே நின்றுவிட, தலையை உயர்த்தி நான் பார்த்தபோது, அது ஒற்றை விளக்குடன் வந்துகொண்டிருந்த லாரி என்பதை அறிந்துகொண்டேன். என்னை அறியாமலேயே ஓர் பெரிய சிரிப்புடன் சத்தமாக நான் சிரித்ததும், லாரி ஓட்டுநரும், அருகாமையிலிருந்த மக்களும் என்னை என்ன நினைத்தார்களோ அறியேன். இப்படியும் காப்பார் கர்த்தர் என்பது அன்று தெளிவாகிப்போனது. எனினும், எவ்வித பதட்டமும் இன்றி, அங்கிருந்து வேதாகம வகுப்புக்கு புறப்பட்டுச் சென்றேன். 

சில அடிகள் சென்றதும், 'இரத்த சாட்சி கூட்டம் இயேசுவை போற்றி' என்ற பாடலை தொடர்ந்து படியவாறு வாகனத்தை ஓட்டியவனாக கூடுகையைச் சென்றடைந்தேன். 'தலைவன் மறைந்தாலும் தலைமுறை தொடரும்' என்ற கருப்பொருளினை வேதாகம வகுப்பின்போது பகிர்ந்துகொண்டேன். கூடுகைக்கு வந்திருப்பவர்களின் மனதைப் பதற்றமடையச் செய்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன், இந்த சாட்சியைப் பகிர்ந்துகொள்ளவில்லை. இரவு 9.30 மணிக்கு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன். ஆவியானவரின் அசைவாடுதலையும், அழுத்தமான உரையாடுதலையும் வேதபாட வகுப்பின்போது உணர்ந்தேன். ஜெபக்கூடுகையிலும் இறுதியாக 'இரத்த சாட்சி கூட்டம் இயேசுவை போற்றி' என்ற பாடலை பாடியவாறே கூடுகையினை நிறைவு செய்தேன். கூடுகை முடிந்து வீடு வந்ததும், கீர்த்தனையிலும், இணையதளத்திலும் 'இரத்த சாட்சி கூட்டம் .....' பாடலைத் தேடியபோது கண்டுபிடிக்க இயலாதவனாக எந்த புத்தக்தில் இருக்கும் இந்த பாடல் எனச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கீர்த்தனை பாடல்களில் எதுவும் சந்தேகம் என்றால், எனது தாயாரிடத்தில் பாடச் சொல்லி கேட்டுப் பழகுவது என்வழக்கம். அப்படியே நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, 'பரிசுத்தர் கூட்டம் இயேசுவை போற்றி' என்ற வரிசையில் அந்த பாடலை கண்டுகொண்டு சந்தோஷ மடைந்தேன். 'பரிசுத்தர் கூட்டம்' என்பது எப்படி 'இரத்தசாட்சி கூட்டம்' என்று மாறிப்போனது? என்ற சிந்தனை என்னில் எழுந்தது; இரத்தம் சிந்தவிருந்த தருணத்திலிருந்து தப்பினதே அந்த வார்த்தை மாற்றமடைந்ததற்கான காரணம் என என் ஆவி உணர்ந்தது. இணையதளத்தில் சகோதரர் தினகரன் பாடும் அப்பாடலைக் கேட்டு மனம் மகிழ்ந்தேன். 

விலைமதிப்புள்ள பொருட்களைக் கொண்டுசெல்லும்போது, திருடர்கள் வழிமறிப்பதும் திருட முயற்சிப்பதும் வழக்கமானதுதானே; என்றாலும், 'பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்' என்ற ஆண்டவரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பிசாசு நுழைய முற்பட்டால் விபத்து பிசாசுக்குத்தான்; மோசேயின் வாழ்க்கையில் நடந்தது போல அவருடைய கைகளே நம்மை மூடும்; சத்துரு அல்ல. வழியில் உன ;னைக் காக ;கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் (யாத் 23:20) என்ற வார்த்தை நமக்குத்தானே.  

Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே