இப்படியும் காப்பார் கர்த்தர் !
ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை மாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை, தூத்துக்குடி ஆசிரியர் காலணியிலுள்ள சகோதரர் சுந்தர் அவர்களது இல்லத்தில் நடைபெறும் MSF ஐக்கியத்தின் வாராந்திர ஜெபக்கூடுகையில் வழக்கமாக பங்குபெறுபவன் நான். அந்நாட்களில், தூத்துக்குடியில் நான் தங்கியிருந்தபோது, வேதாகமத்தின் 'யோசுவா' புத்தகத்திலிருந்து வேதாக வகுப்புகளின் மூலமாக சத்தியங்களை தொடர்ந்து கற்றுக்கொடுத்துவந்தேன். நான் சுகவீனமாக இருந்த காரணத்தினால், சில நாட்களாக எனது மனைவியின் துணையோடு இருசக்கர வாகனத்தில் அக்கூடுகைக்குச் சென்று வருவேன். மிஷனரிகளுக்காகவும், ஊழியங்களுக்காகவும் தொடர்ந்து ஜெபித்து வரும் அக்கூடுகையில் எப்படியாகிலும் கலந்துகொள்ளவேண்டும் என்று என் மனம் அத்தினம் வந்ததும் அடித்துக்கொண்டேயிருக்கும்.
8 நவம்பர் 2016, செவ்வாய் கிழமை, என் மனைவியோ சுகவீனமாயிருந்தாள். மருத்துவமனைக்குச் சென்றுவந்து வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாள். எனவே, அன்று இருசக்கர வாகனத்தை நானே ஓட்டிச் சென்றேன். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வெளிச்சம் குறைந்த போல்பேட்டை சாலையில் நான் சென்றுகொண ;டிருந்தபோது, எனக்கு எதிரே சாலையின் இடதுபுறத்தில் இருசக்கர வாகனம் ஒன்று வருவதைக் கண்டு, யாரோ ஒருவர் இருசக்கர வாகனத்தை தவறான பக்கத்தில் ஓட்டிவருவதாக நினைத்து சற்று வலப்புறம் ஒதுங்கியவாறு சென்றுகொண்டிருந்தேன். சுமார் இரண்டு அடி அருகாமையில் வந்ததும், எதிரே வந்த இருசக்கர வாகனம் அப்படியே நின்றுவிட, தலையை உயர்த்தி நான் பார்த்தபோது, அது ஒற்றை விளக்குடன் வந்துகொண்டிருந்த லாரி என்பதை அறிந்துகொண்டேன். என்னை அறியாமலேயே ஓர் பெரிய சிரிப்புடன் சத்தமாக நான் சிரித்ததும், லாரி ஓட்டுநரும், அருகாமையிலிருந்த மக்களும் என்னை என்ன நினைத்தார்களோ அறியேன். இப்படியும் காப்பார் கர்த்தர் என்பது அன்று தெளிவாகிப்போனது. எனினும், எவ்வித பதட்டமும் இன்றி, அங்கிருந்து வேதாகம வகுப்புக்கு புறப்பட்டுச் சென்றேன்.
சில அடிகள் சென்றதும், 'இரத்த சாட்சி கூட்டம் இயேசுவை போற்றி' என்ற பாடலை தொடர்ந்து படியவாறு வாகனத்தை ஓட்டியவனாக கூடுகையைச் சென்றடைந்தேன். 'தலைவன் மறைந்தாலும் தலைமுறை தொடரும்' என்ற கருப்பொருளினை வேதாகம வகுப்பின்போது பகிர்ந்துகொண்டேன். கூடுகைக்கு வந்திருப்பவர்களின் மனதைப் பதற்றமடையச் செய்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன், இந்த சாட்சியைப் பகிர்ந்துகொள்ளவில்லை. இரவு 9.30 மணிக்கு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன். ஆவியானவரின் அசைவாடுதலையும், அழுத்தமான உரையாடுதலையும் வேதபாட வகுப்பின்போது உணர்ந்தேன். ஜெபக்கூடுகையிலும் இறுதியாக 'இரத்த சாட்சி கூட்டம் இயேசுவை போற்றி' என்ற பாடலை பாடியவாறே கூடுகையினை நிறைவு செய்தேன். கூடுகை முடிந்து வீடு வந்ததும், கீர்த்தனையிலும், இணையதளத்திலும் 'இரத்த சாட்சி கூட்டம் .....' பாடலைத் தேடியபோது கண்டுபிடிக்க இயலாதவனாக எந்த புத்தக்தில் இருக்கும் இந்த பாடல் எனச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கீர்த்தனை பாடல்களில் எதுவும் சந்தேகம் என்றால், எனது தாயாரிடத்தில் பாடச் சொல்லி கேட்டுப் பழகுவது என்வழக்கம். அப்படியே நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, 'பரிசுத்தர் கூட்டம் இயேசுவை போற்றி' என்ற வரிசையில் அந்த பாடலை கண்டுகொண்டு சந்தோஷ மடைந்தேன். 'பரிசுத்தர் கூட்டம்' என்பது எப்படி 'இரத்தசாட்சி கூட்டம்' என்று மாறிப்போனது? என்ற சிந்தனை என்னில் எழுந்தது; இரத்தம் சிந்தவிருந்த தருணத்திலிருந்து தப்பினதே அந்த வார்த்தை மாற்றமடைந்ததற்கான காரணம் என என் ஆவி உணர்ந்தது. இணையதளத்தில் சகோதரர் தினகரன் பாடும் அப்பாடலைக் கேட்டு மனம் மகிழ்ந்தேன்.
விலைமதிப்புள்ள பொருட்களைக் கொண்டுசெல்லும்போது, திருடர்கள் வழிமறிப்பதும் திருட முயற்சிப்பதும் வழக்கமானதுதானே; என்றாலும், 'பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்' என்ற ஆண்டவரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பிசாசு நுழைய முற்பட்டால் விபத்து பிசாசுக்குத்தான்; மோசேயின் வாழ்க்கையில் நடந்தது போல அவருடைய கைகளே நம்மை மூடும்; சத்துரு அல்ல. வழியில் உன ;னைக் காக ;கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் (யாத் 23:20) என்ற வார்த்தை நமக்குத்தானே.
Comments
Post a Comment