Skip to main content

கண்ணில் தெரியாத கண்ணாடி

 



2015 டிசம்பர் 28, காலை 10.15 மணி, சென்னை கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் ஓய்வெடுக்கும் அறையின் ஓர் இருக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தேன். தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்து வந்த களைப்பினைப் போக்கிக்கொள்ள சற்று இளைப்பாறிக்கொண்டிருந்தேன். அந்த ஓய்வறை வெளியில் இருப்போர் உள்ளேயும், உள்ளே இருப்போர் வெளியில் நடப்பவைகளைக் காணும் வண்ணமாக கண்ணாடியினால் சுற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது. பேருந்திற்காகக் காத்திருந்த பயணிகள் அறையினுள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அப்போது, சட சடவென இறக்கையினை அடித்தவண்ணம் திடீரென அந்த அறையினுள் வேகமாகப் பறந்துகொண்டிருந்தது ஓர் புறா. அறையிலிருந்து வெளியே பறந்து செல்ல அங்கும் இங்கும் சுற்றிவாறு பறந்துகொண்டிருந்தது; வெளியில் வானமும், மரங்களும், செடிகளும் தெரிவதைப் பார்த்துவிட்ட புறா, வேகமாக பறந்து சென்று வெளியேற முயற்சித்தது; அந்தோ பரிதாபம், இடையில் இருந்த கண்ணாடியை அது அறியாததால், அதிலே மோதி திரும்பியது. 

இந்தப் புறாவைப் போன்றதாகவே இன்று நம்முடைய வாழ்க்கையும் காணப்படலாம். வேதத்தை வாசிக்கிறோம், ஆலயத்திற்குச் செல்கிறோம், கூட்டங்களில் பங்கேற்கிறோம், கிறிஸ்தவர்கள் என்ற உள்வட்டத்திற்குள் பறந்துகொண்டிருக்கிறோம்; தேவன் யார் என்றும் பரலோகம் எப்படிப்பட்டதென்றும் நாம் அறிந்திருந்திக்கிறோம். என்றாலும், இந்த உலகை விட்டும், உடலை விட்டும் நாம் வெளியேறும்போது கண்ணாடியில் மோதி விழுந்துவிடக்கூடாது. வசனங்களுக்குக் கீழ்ப்படியாமல் வாழுவோமென்றால், வழியாகிய இயேசுவுக்கு இதயத்தில் இடங்கொடாமல் வாழுவோமென்றால் மரணத்திற்குப் பின் நமது ஆத்துமா பரலோகத்தை நோக்கிச் செல்ல முயற்சிக்கும்போது தடுக்கப்படுவது நிச்சயம். பரலோகத்தைப் பற்றிய அறிவிருக்கலாம், ஆனால் அங்கு பறக்கமுடியாது. இன்றே வழியைத் தெரிந்துகொண்டால், வெளியே பறப்பது எளிதாயிருக்கும். 

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் (யோவா 12:48) என்றார் இயேசு. 


Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே