என்னைத் தேடிய யெகோவா
நவம்பர் 2 இரவு சுமார் 12 மணி, சிநேகிதன் பத்திரிக்கைப் பணியினை செய்துகொண்டிருந்தேன், அச்சமையத்தில் 'யெகோவா' என்கிற ஆண்டவரது பெயரை அதிகம் ஆராய்ந்தவனாக படுக்கைக்குச் சென்றேன். தூக்கம் வருவதற்கு முன் ஏதாவது பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பது எனது வழக்கம், அப்படியே அன்று பாடல்களைக் கேட்க கைபேசியை எடுத்தபோது, திடீரென வேண்டாம், நேரம் ஆகிவிட்டது தூங்கிவிடலாம் என்ற நினைப்புடன ;, படுக்கையில் சரிந்தேன், சிந்தை சிலவற்றை நினைத்துக்கொண்டிருக்கும்போது, திடீரென 'யகோ..வா' என்கிற சத்தம் நான் படுத்திருந்த அறையினுள் பலமாக ஒலித்தது. அறைக் கதவு திறந்திருந்தது; சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தபோது, யாரும் இல்லை; சத்தத்தின் ஒலியில் என்ன செய்வதென்று அறியாதவனாகவும், என்ன நடக்கிறது என்று புரியாதவனாகவும், அதிர்ந்துபோனவனாகவும், பயந்துபோனவனாகவும் அங்கும் இங்கும் பார்த்தவனாக யாரும் இல்லையே எங்கிருந்து வந்தது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
அந்த அறையிலிருந்து எழும்பி, எனது மனைவி மற்றும் பிள்ளைகள் உறங்கும் அறைக்கு சென்றுவிட எழுந்தேன். அப்போது, 'யெகோவா' என்று ஆண்டவர் பேசியதை உணர்ந்துகொண்டேன். 'கர்த்தர்' 'தேவன்' 'ஆண்டவர்' 'பிதா' போன்ற பல பதங்களை அவரை ஆராதிக்கும்போது உபயோகித்திருந்தபோதிலும், பெயரையோ அடிக்கடி எனது உதடுகள் உச்சரித்ததில்லை. தன்னையே அறிமுகப்படுத்திச் சென்ற அன்று இரவு எனது வாழ்க்கையில் மறக்க இயலாதது. 19 வயதில் இரட்சிக்கப்பட்டபோது, ஆண்டவர் பேசுவதை கேட்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்; ஆனால், 'வேதத்தின் மூலமாக அவர் பேசுகிறார்' என்ற அறிவு அதிகமாக அதிகமாக அந்த விருப்பத ;தை விட்டுவிட்டேன். அவரை நேரடியாக பார்க்கவேண்டும் என்று ஆசைகொண்டிருக்கிறேன்; எனினும், 'கண்டு விசுவாசிக்கிறவனைக் காட்டிலும் காணாமல் விசுவாசிக்கிறவன் பெரியவன்' என்ற அறிவு அதிகமாக அதிகமாக அந்தப ; படியினையும் மறந்துபோனேன். எனினும், 43 வயதான என்னை தேடிவந்து தனது பெயரைச் சொல்லிப்போன அந்த இரவு அற்புதமானது.
Comments
Post a Comment