முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னைத் தேடிய யெகோவா

 

என்னைத் தேடிய யெகோவா 


நவம்பர் 2 இரவு சுமார் 12 மணி, சிநேகிதன் பத்திரிக்கைப் பணியினை செய்துகொண்டிருந்தேன், அச்சமையத்தில் 'யெகோவா' என்கிற ஆண்டவரது பெயரை அதிகம் ஆராய்ந்தவனாக படுக்கைக்குச் சென்றேன். தூக்கம் வருவதற்கு முன் ஏதாவது பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பது எனது வழக்கம், அப்படியே அன்று பாடல்களைக் கேட்க கைபேசியை எடுத்தபோது, திடீரென வேண்டாம், நேரம் ஆகிவிட்டது தூங்கிவிடலாம் என்ற நினைப்புடன ;, படுக்கையில் சரிந்தேன், சிந்தை சிலவற்றை நினைத்துக்கொண்டிருக்கும்போது, திடீரென 'யகோ..வா' என்கிற சத்தம் நான் படுத்திருந்த அறையினுள் பலமாக ஒலித்தது. அறைக் கதவு திறந்திருந்தது; சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தபோது, யாரும் இல்லை; சத்தத்தின் ஒலியில் என்ன செய்வதென்று அறியாதவனாகவும், என்ன நடக்கிறது என்று புரியாதவனாகவும், அதிர்ந்துபோனவனாகவும், பயந்துபோனவனாகவும் அங்கும் இங்கும் பார்த்தவனாக யாரும் இல்லையே எங்கிருந்து வந்தது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். 

அந்த அறையிலிருந்து எழும்பி, எனது மனைவி மற்றும் பிள்ளைகள் உறங்கும் அறைக்கு சென்றுவிட எழுந்தேன். அப்போது, 'யெகோவா' என்று ஆண்டவர் பேசியதை உணர்ந்துகொண்டேன். 'கர்த்தர்' 'தேவன்' 'ஆண்டவர்' 'பிதா' போன்ற பல பதங்களை அவரை ஆராதிக்கும்போது உபயோகித்திருந்தபோதிலும், பெயரையோ அடிக்கடி எனது உதடுகள் உச்சரித்ததில்லை. தன்னையே அறிமுகப்படுத்திச் சென்ற அன்று இரவு எனது வாழ்க்கையில் மறக்க இயலாதது. 19 வயதில் இரட்சிக்கப்பட்டபோது, ஆண்டவர் பேசுவதை கேட்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்; ஆனால், 'வேதத்தின் மூலமாக அவர் பேசுகிறார்' என்ற அறிவு அதிகமாக அதிகமாக அந்த விருப்பத ;தை விட்டுவிட்டேன். அவரை நேரடியாக பார்க்கவேண்டும் என்று ஆசைகொண்டிருக்கிறேன்; எனினும், 'கண்டு விசுவாசிக்கிறவனைக் காட்டிலும் காணாமல் விசுவாசிக்கிறவன் பெரியவன்' என்ற அறிவு அதிகமாக அதிகமாக அந்தப ; படியினையும் மறந்துபோனேன். எனினும், 43 வயதான என்னை தேடிவந்து தனது பெயரைச் சொல்லிப்போன அந்த இரவு அற்புதமானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச...

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவ...

உருப்படியான புள்ள!

உருப்படியான புள்ள! தூத்துக்குடியிலுள்ள வங்கி ஒன்றில் எனது மனைவி பெயரில் கணக்கு ஒன்று தொடங்குவதற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாளே வங்கிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, நிரப்பி, புகைப்படம் இல்லாததினால், அடுத்த நாள் காலையில் வங்கிக்குச் செல்லும் வழியில் உடனடியாக ஏதாவது ஸ்டூடியோ ஒன்றில் புகைப்படம் எடுத்து படிவத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அடுத்த நாள் வங்கிக்குச் செல்லும் வழியில் ஏதாவது ஸ்டூடியோ இருக்கிறதா என தேடிக்கொண்டே சென்றேன்; அப்பொழுது "JPN Studio உடனடி போட்டோ பிரின்ட் கிடைக்கும்" என்ற போர்டு கண்ணில் பட்டது. அதன் உள்ளே நுழைந்தேன், பெரியவர்கள் ஒரு சிறிய பையன் உட்கார்ந்திருந்தான், அருகே இரண்டு அமர்ந்திருந்தனர். நான் அச்சிறுவனிடம், "போட்டோ எடுக்கனும், உடனே பிரின்ட் வேணும் கிடைக்குமா" என கேட்டேன். அவன் "ஓ கிடைக்குமே" என பதிலுரைத்தான். நான் யார் எடுப்பார்கள்? என கேட்டதற்கு "நான்தான்” அவன் பதில் சொன்னபோது, சற்று வியந்துபோனேன். அப்படியே அவன் என அமர்ந்திருந்த இருக்கையின் உள்ளே எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு கம்ப்யூட்டர் அர...