Skip to main content

டிராபிக் போலீசுக்கு டாட்டா

 

டிராபிக் போலீசுக்கு டாட்டா

 

 

11 டிசம்பர் 2011. அலுவலக வேலையாக சிவகாசி சென்றிருந்த நான், அங்கு பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஸ்ரீநிவாசா லாட்ஜ்-ல் தங்கியிருந்தேன். அன்று மாலை என்னைக் காண வந்திருந்த, சிவகாசியைச் சேர்ந்த தம்பி கிங்ஸ்லி உடன் எனது அலுவலகப் பணியினைத் தொடர இரு சக்கர வாகனத்தில் லாட்ஜ்-ல் இருந்து சென்றுகொண்டிருந்தேன். சற்று தூரம் சென்றதும் மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு இடம். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ் ஒருவர் வாகனப் போக்கு வரத்தினை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நாங்கள் சென்ற சாலைக்கு 'நில்' என்ற உத்தரவு கிடைக்க, நாங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்துக்கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு சிறுவன், தவறுதலாக சற்று முன்னே சென்று வாகனத்தை நிறுத்தினான். அவனிடம் ஓட்டுநர் உரிமம் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனைக் கண்ட காவலர் அவனது தவற்றிற்காக, அவனது பைக் சாவியை எடுத்துவைத்துக்கொண்டு, சற்று ஒரமாக நிற்கும்படி அவனைச் சொல்லிவிட்டு, மீண்டும் தனது போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த சிறுவன் தான் ஓட்டிச் சென்ற பைக்-ஐ ஏறக்குறைய பத்து அடி தூரத்திற்கு உருட்டிச் சென்று, ஓரத்தில் நின்று தனது பேன்ட் பாக்கெட்-ல் அவன் வைத்திருந்த பைக்கின் மற்றொரு சாவியினை எடுத்து, ஸ்டார்ட் செய்து சென்றுவிட்டான்; எத்தனை புத்திசாலிச் சிறுவன். இதற்குத்தான் மாற்றுச் சாவியினை எப்போதும் தனது பையில் வைத்திருந்தானோ. திரும்பிப் பார்த்த காவலருக்கு அதிர்ச்சிதான், ஆனாலும் தான் ஏமாந்துவிட்டதை அவர் காட்டிக்கொள்ளவில்லை. 

Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே