Skip to main content

பிராந்திக் கட எங்க இருக்கு?

 

பிராந்திக் கட எங்க இருக்கு? 

 

 


2011ம் ஆண்டு மே 5, இரவு 8:35 மணி; அலுவலகப் பணியினிமித்தம் சிவகாசி வந்திருந்த நான், நாள் முழுக்க பணியினை முடித்து, தங்கியிருந்த விடுதி நோக்கி நடந்துகொண்டிருந்தேன். சிறிது தூரம் வந்ததும்? சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்னை நோக்கி கையசைப்பது தெரிந்தது? ஏறிட்டுப் பார்த்தேன், என்றபோதிலும் நான் அறியாத நபர் அவர்; யாரையோ அழைக்கிறார், என்னை அல்ல என முன்னேறினேன். கடந்து செல்ல முயற்சித்த என்னை மீண்டும் கை அசைத்து; 'தம்பி கொஞ்சம் வாங்க' என்றார். மேலாடை இல்லாத அறையாடை, இடுப்பிலே இறுக்கிக்கட்டிய சாரம், கையிலே தொங்கும் சுருட்டப்பட்டிருந்த துணிப்பை அதன் உள்ளே சில்லறைகள் சிணுங்கும் சத்தம், பாதத்தில் பழமையான செருப்பு, அவர் உழைத்து வந்த மனிதன் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். நானா! என்ன வேண்டும்? என கேட்க, அவர் என் அருகிலே வந்து காதருகே 'பிராந்திக் கட எங்க இருக்கு' என கேட்டார். இறைத் தொண்டன் என்னிடத்தில், கறை படிய வழி கேட்டும் மனிதனை நினைத்து நொந்துகொண்டேன். 'நான் சிவகாசிக்குப் புதுசு, பிராந்தி கட தெரியாது, நான் குடிக்கிறவனுமல்ல, நீங்க குடிக்காதீங்க ஐயா' என்ற எனது வார்த்தைகளைக் கேட்டபோது, அவரது இமைகள் சுருங்கின வெட்கமாய்ச் சிரித்தார், அப்போது முன்னிரண்டு உடைந்த பற்களுக்கு இடையே வெளியே வந்தது அவரது நாக்கு. அவர் என்னை மதிப்பதை உணர்ந்தேன், ஆனாலும் அவரை மறித்து நிற்க முடியாது என்பதையும் புரிந்துகொண்டேன். இரண்டடி முன்னேறினேன் அதற்குள் அவர் இன்னொருவரிடம் 'பிராந்திக் கட எங்க இருக்கு?' என்ற அதே கேட்வியைத் தான் மீண்டும் கேட்டார் என்பதை, அந்த மனிதன் கைகாட்டி வழிகாட்டி அனுப்பிவைத்ததைக் கண்டு புரிந்துகொண்டேன். அத்தனை நெருக்கமான மக்கள் கூட்டம், அங்கும் இங்கும் அவசர அவசரமாய் போய்க்கொண்டிருக்க, என்னைப் பார்த்து ஏன் இப்படி?... என்ற கேள்வி ஒருபுறம் மனதில் எழும்ப. அலுவலக வேலையினால் அலுத்து, தள்ளாடி நடந்திருப்பேனோ, நான் எப்படி அவரது பார்வையில்.... குழப்பமான உணர்வு எனக்கு உண்டாக விடுதி நோக்கி நடந்தேன்; அவர் வீடு சேர்ந்திருப்பாரா அல்லது வீதியில் கிடப்பாரா? என்ற கேள்விக்கு விடை இல்லை என்னிடத்தில்......

Comments

Popular posts from this blog

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே