Skip to main content

தூங்கும் தூக்குநூல்

 

தூங்கும் தூக்குநூல்

 

அது ஓர் காலை, டிசம்பர் 2012, கேமரா உடன் கட்டப்பட்டிருக்கும் ஓர் கட்டிடத்தின் மேல் நின்றுகொண்டிருந்தேன். கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் நின்று கொண்டு, காலைத் தென்றல் என்னை வருட, காலைப் பொழுதின் அழகிலே எனது கண்கள் சுகம் கண்டுகொண்டிருக்க, மாடியின் மேலே அங்கும் இங்கும் நடைபோட்டுக்கொண்டிருந்தேன். காலைப் பொழுதிலே, உள்ளம் இறைவனைத் தொழுதுகொண்டிருந்தது. ஒரு புறம் உதித்த சூரியனின் வட்ட உடல் கண்களில் பட்டது, ஒளியை அது பெருக்கியபோது என் இமைகள் அதனைக் காணக்கூடாது சுருக்கிக்கொண்டன. வீசிய அதன் வெளிச்சத்தில் சற்று சுற்றிப்பார்த்தபோது, எனது கண்ணில் பட்ட ஓர் இடம். 2005-ம் ஆண்டு சமூக விரோதிகளால் அடிக்கப்பட்டு, நடக்க இயலாது மயங்கிக்கிடந்த இடமது. அதனைக் கண்டதும் என் நினைவு 2005-ம் ஆண்டிற்குப் பயணின்தது, 2012-க்கு மீண்டு வந்தது. அந்த நினைவிலிருந்து மீண்ட எனக்கு மீண்டும் ஓர் காட்சி.

கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடத்தின் ஒரு தூணில் இரண்டு தூக்கு நூல்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அன்றைய பணியை முடித்துவிட்டு பணியாளர் அவசர அவசரமாக தொங்கும் இடத்திலேயே அதனை விட்டுச் சென்றிருந்தார். எனினும், தொங்கிக்கொண்டிருந்த அந்த தூக்கு நூலில் ஒன்று தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. நேராகத் தொங்கி, அங்கும் இங்கும் சற்று அசைந்து அந்த தூண் நேராகக் கட்டப்பட்டிருப்பதைக் காட்டிக்கொண்டிருந்தது. கட்டப்பட்டுவரும் தூணைச் சரிபார்க்க, அதனைத் தூக்கிப் பார்த்தவர் அப்படியே விட்டுவிட்டாலும், வந்தவருக்கெல்லாம் அது சரியாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற செய்தியினை தொங்கிக்கொண்டிருந்த தூக்குநூல் தெரிவித்துக்கொண்டிருந்தது. யாரோ ஒருவர் உபயோகிக்கும்போது, நேர்மையாக, நல்லவராக, சரியாக, வேதத்திற்கு ஒத்தவராக வாழ்ந்துவிட்டு, தானாக தொங்கும்போது வாழ்க்கையில் நேர்மையின்றி வாழும் மனிதர்களுக்கான பாடமாக இதனைப் பார்த்தேன். ஆலயத்திற்குள் செல்லும்போது, கூட்டங்களுக்குச் செல்லும்போது, ஊழியர்களுடன் பழகும்போது, ஊழியம் செய்யும் போது, பிரசங்கம் செய்யும்போது வேதத்திற்கு ஒத்தபடியே தொங்கும் பலரது தூக்குநூலான வாழ்க்கை, தனிப்பட்ட விதத்திலும் யாருமில்லாத நேரத்திலும், யாரும் நடத்தாத நேரத்திலும், கண்காணிக்காத நேரத்திலும் சரியாகத் தொங்கவேண்டும்; இல்லையேல் அது இரட்டை வேட வாழ்க்கை.

அந்தத் தூக்குநூலைப் பற்றி இத்தனை அறிவை இறை உணர்த்தலால் பெற்ற எனக்கு, அந்தத் தூணின் மறுபுறமே மற்றொரு பாடத்தினைக் கற்றுக்கொடுக்கக் கர்த்தர் காத்திருந்தார். ஆம், அந்தத் தூணின் மறுபுறத்திலேயே மற்றுமொரு தூக்குநூல் எனது கண்ணில் தென்பட்டது. அது தூணைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த பலகைகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்தது. சிக்கிக்கொண்டிருந்ததால், பணியை முடித்துச் சென்றவருடன், இதன் பணியும் முடிவடைந்திருந்தது. இவ்விரண்டினையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்த எனக்கு ஓர் ஆவிக்குரிய பாடம் ஆயத்தமாயிருந்தது. இரண்டாவது தூக்குநூலைப் போல உலகத்தில் சிக்கிக்கொண்டால், நேர்மையைக் காட்டவேண்டியவர்களே மாட்டி;ககொண்டால், உலகை அடையாளம் காட்டவேண்டியவர்களே அகப்பட்டுக்கொண்டால் என்னவாகும்? நேராய் தொங்கிக்கொண்டேயிருக்கவேண்டியவர்கள் தூங்கிவிட்டால், நேர்மை எப்படித் தெரியும்? சிக்கிக்கொள்ளாத ஒரு மனிதன், தனிமையில் நேராகவும், நேர்மையையே காட்டுகிறவனாயும் இருப்பான் என்பதே அப்பாடம். நீ தொங்கும் தூக்குநூலா, தூங்கும் தூக்குநூலா?
இப்படியும் இறைவன் நடத்திய காலைத் தியானம், அது அவர் ஞானம். 

Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே