Skip to main content

தூளியில் தூரமான தூக்கம்



(அனுபவம்)
 

    அக்டோபர் 21, 2022, குளிர்காலத் தொடக்க நாட்களின் கருக்கலாகிக்கொண்டிருந்த மாலை நேரம், என்னுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்த எனது மனைவியின் வாலிபத் தோழிகளான சக ஆசிரிய ஊழியர்களை, அவர்கள் தங்கியிருந்த ஜெம்ஸ் பள்ளி மாணவர்கள் விடுதி வரைச் சென்று விட்டு விட்டு வரும்படியாக எனது மனைவி, மகளுடன் சென்றுகொண்டிருந்தோம்; எங்களுடன், எங்களது வீட்டின் அருகே தங்கியிருக்கும் மற்றொரு சக ஊழிய சகோதரியும் தனது பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவுசெய்திருக்கும் மகளுடன் வந்திருந்தார். தோழிகளை அவர்களது வசிப்பிடத்தில் விட்டு விட்டு, சக ஊழியரான சகோதரி மற்றும் அவரது மகளுடன் நானும் எனது மனைவியும், உரையாடிக் கொண்டே வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது, பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவு செய்திருந்த அந்த சக ஊழியச் சகோதரியின் மகளை நோக்கி, 'என்னம்மா, என்ன படிக்கப் போற? வானத்துக்கு ஏறணும்னு திட்டம்போட்டாத்தான், பூமியிலையாவது உட்கார முடியும்; அதனால, உயர்ந்ததா படிக்க யோசி' என்று ஆலோசனை சொன்னேன் நான். ஆலோசனையின் வாக்கியத்தை முடித்ததும், பின்னிட்டுப் பார்த்தபோது, மிக அருகில், சகோதரர் ஒருவர் தனது மனைவியுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும், சிரித்தவாறு, விசாரித்த நான், 'அந்த மாணவிக்கு என்ன ஆலோசனை சொன்னேன் என்பதை மீண்டும் அவரிடத்தில் சொல்லியவாறு நடந்தவனாக வீடு வந்தடைந்தேன். 

      இரவு சுமார் 11:10 மணி, படுக்கையில் உடல் அசதியாகவும், அமைதியாகவும் கிடந்தபோதிலும், சிந்தனையோ சிதறிக் கிடந்தது. உறக்கம் வர அதனை மீண்டும் ஒன்றிணைப்பது என்பது இயலாததாகவே தோன்றிக்கொண்டிருந்தபோது, அந்த நாளில் நடைபெற்ற நிகழ்வுகளில், நினைவில் நிற்பவைகளை அசைபோடத் தொடங்கியது என் மனது. அப்படி அசைபோட்டுக்கொண்டிருந்த தருணத்தில், திடீரென அசையாமல் நின்றபோது, 'உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?' (பிரசங்கி 5:6) என்ற வசனத்தோடு, 'நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்' (ஏசாயா 14:13-15). 'நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்' (ஒபதியா 1:4) என்ற தேவன் ஞாபகமூட்டிய வசனங்கள், நான் தவறிய தருணத்தை நினைவறியச் செய்தன. 

'வானத்துக்கு ஏறணும்னு திட்டம் போட்டாத்தான், பூமியிலையாவது உட்கார முடியும்' என்று அந்த மாணவிக்கு ஆலோசனையாக நான் கூறிய வார்த்தைகள், 'வானம் எனக்குச் சிங்காசனம்' (ஏசாயா 66:1) என்ற வசனத்திற்கு விரோதமானதாகவும், 'நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்' என்று சொன்ன தள்ளப்பட்டுப்போன தூதனுடைய வார்த்தைகளுக்கு ஒத்திருப்பதையும் உணந்து, ஆண்டவரிடத்தில் அறிக்கை செய்தேன். அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும் (ரோமர் 12:3) என்ற செய்தியும், மெல்லிய சத்தமாய் என் மனதை வந்து சேர்ந்தது. உள்ளத்தில் இருக்கும் உணர்விற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன்; எனது உதறிய உதடு, சிதறிய சிந்தனை, தவறிய பாதையினைப் புரிந்துகொண்டேன்; தூரத்திலிருந்த நித்திரை என்னை தூளிலேற்றிக்கொண்டது.  


Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே