உருப்படியான புள்ள!
தூத்துக்குடியிலுள்ள வங்கி ஒன்றில் எனது மனைவி பெயரில் கணக்கு ஒன்று தொடங்குவதற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாளே வங்கிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, நிரப்பி, புகைப்படம் இல்லாததினால், அடுத்த நாள் காலையில் வங்கிக்குச் செல்லும் வழியில் உடனடியாக ஏதாவது ஸ்டூடியோ ஒன்றில் புகைப்படம் எடுத்து படிவத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அடுத்த நாள் வங்கிக்குச் செல்லும் வழியில் ஏதாவது ஸ்டூடியோ இருக்கிறதா என தேடிக்கொண்டே சென்றேன்; அப்பொழுது "JPN Studio உடனடி போட்டோ பிரின்ட் கிடைக்கும்" என்ற போர்டு கண்ணில் பட்டது. அதன் உள்ளே நுழைந்தேன், பெரியவர்கள் ஒரு சிறிய பையன் உட்கார்ந்திருந்தான், அருகே இரண்டு அமர்ந்திருந்தனர். நான் அச்சிறுவனிடம், "போட்டோ எடுக்கனும், உடனே பிரின்ட் வேணும் கிடைக்குமா" என கேட்டேன். அவன் "ஓ கிடைக்குமே" என பதிலுரைத்தான். நான் யார் எடுப்பார்கள்? என கேட்டதற்கு "நான்தான்” அவன் பதில் சொன்னபோது, சற்று வியந்துபோனேன். அப்படியே அவன் என அமர்ந்திருந்த இருக்கையின் உள்ளே எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு கம்ப்யூட்டர் அருகே அமர்ந்திருந்த போடும் கருவி இருந்தன; அருகே மற்றும் போட்டோ பிரிண்ட் போடும் வாடிக்கையாளர்களின் புகைப்படத்தை சரியான அளவில் கத்தரியினால் வெட்டிக்கொண்டிருந்தான். இவங்களுக்க முடிச்சிட்டு வந்துடுரேன் என்றான் என்னிடம். நான் சற்று பேச்சு கொடுத்தேன், பெயர் அந்தோணி, ஆறாம் வகுப்பு படிக்கிறான். சுட்டித்தனமான பேச்சு, வாடிக்கையாளர்களை வளைத்துப்போடும் அவனது குறும்புத்தன பேச்சிற்கு ஈடுகொடுத்து நானும் பேசிக்கொண்டிருந்தேன். அப்பா ஆர்டருக்கு போட்டோ எடுக்க போயிருக்காரு, அப்பா இல்லாத சமயத்துல நான்தான் போட்டோ எடுப்பேன், ஸ்கூல் லீவுல அப்பாவுக்கு உதவி செய்வேன் என்றான்.
அந்த வாடிக்கையாளர்களை அனுப்பிய பின்னர், உள்ளே வாங்க என எங்களை அழைத்தான். உள்ளே சென்றபோது, ஸ்டூல் ஒன்றில் உட்காரச் செய்து, முதிர்ந்த புகைப்படக்காரர் போல, அக்கா இங்க பாருங்க, கழுத்த கொஞ்சம் கீழ, மேல, லேசா தூக்கி எனச் சொல்லி புகைப்படத்தினை எடுத்து, போதுமா, நல்லா இருக்கான்னு பாருங்க என்றான். அப்படத்தில் நாங்கள் திருப்தியானபோது உடனே சென்று பிரிண்ட் போட்டு கொடுத்தான்.
வாலிபர்களான பின்னும் குடும்பத்திற்கும், பெற்றவர்களுக்கும் உதவி செய்யாமல், அவர்களது பணத்தில் ஊர் சுற்றிக்கொண்டு, ஊதாரிகளாக அலையும் எத்தனையோ வாலிபர்களை ஒப்பிடுகையில், இச்சிறுவனைப் பெற்ற பெற்றோர் பாக்கியசாலிகள் என கண்டு வியந்தேன்; உருப்படியான புள்ள!
கருத்துகள்
கருத்துரையிடுக