Skip to main content

பீடியுடன் நின்ற பணியாளர்

பீடியுடன் நின்ற பணியாளர்


23 ஜுலை 2017, தமிழகத்தின் ஆலயம் ஒன்றில் செய்தியளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். சகல ஆயத்தங்களுடன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றேன். அதுவரை அந்த ஆலயத்திற்கு செய்தியளிக்கும்படி நான் சென்றதில்லை. எனவே, அழைத்தவர்கள் சொன்ன அடையாளங்களின்படி அந்த ஊரைச் சென்றடைந்து ஆலயத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். இருபுறமும் வியாபாரத்தை மும்முரமாய்ச் செய்துகொண்டிருக்கும் கடைகள் அமைந்திருக்கும் சாலையின் வழியாக, இடது வலது புறம் திரும்பிப் பார்த்தவனாக, மெல்ல ஊருக்குள் சென்றுகொண்டிருந்தேன். 

அப்போது, திடீரென கண்ணில் பட்ட ஒர் ஆலயத்தைக் கண்டு, செய்தியளிக்கவேண்டிய ஆலயம் இதுவாகத்தானிருக்குமோ என எட்டிப் பார்த்தவனாக சாலையின் அடுத்த பக்கத்தில் கொண்டிருந்தேன். ஆலயத்தின் முன்புறக் கோட்டைச் சுவரின் இரும்பு வாசலுக்கு வெளியே ஓர் மனிதர் பீடி குடித்துக்கொண்டு நின்றார். அந்த மனிதருக்கும் ஆலயத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கப்போகிறது என்று கணித்தவனாக நின்றுகொண்டிருந்தேன்.

அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்த என்னை பீடி குடித்துக்கொண்டிருந்த மனிதர் கண்டதும், பீடியைக்  குடித்துக்கொண்டே என்னை நோக்கி வந்தார். 'நீங்க இந்த கோயிலுக்கா வந்திருக்கீங்க?' என்று என்னிடம் கேட்டார். இவர் ஏன் என்னிடத்தில் கேட்கிறார்? என்ற கேள்வி உள்ளத்தின் ஒரு புறத்தில் எழுந்தாலும், உதட்டளவில் 'ஆம்' என்று பதில் சொன்னேன். எனது பதிலைக் கேட்டதும், இன்னும் பக்கத்தில் வந்தார். கையிலிருந்த பீடியை கடைசியாகக் புகைத்து முடித்தபின்பு, அதனைக் கீழே போட்டு செருப்புக் காலால் நசுக்கி அணைத்தார். 

இத்தனையாய் விசாரிக்கின்றீர்களே, நீங்கள் யார்? என்று அந்த மனிதரைக் கேட்டபோது, 'நான்தான் இந்த கோவிலின் கோயில்குட்டியார்' என்று பதில் வந்ததைக் கேட்டு, அதிர்ந்துபோனேன். 'பிரசங்கியார் வருவார் பார்த்துக்கொள்ளுங்கள் என்று என்னிடத்தில் சொல்லியிருந்தார்கள், எனவேதான் வெளியே நின்று உங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்' என்றார். பிரசங்கியாருக்கு முன் பீடி குடித்ததைக் குறித்து எந்த ஒரு பதட்டமும் அவர் முகத்தில் காணப்படவில்லை. சற்று நேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'தான் ஒரு இந்து மனிதர் என்றும், விக்கிரகங்களை வணங்குபவர் என்றும், வேலையில்லாதிருந்த தனக்கு இந்த ஆலயத்தில் கோயில்குட்டியாராக வேலைபோட்டுக்கொடுத்தார்கள் என்றும், எனது மனைவி கோவிலை சுத்தம் செய்வாள், என்றாலும், பெண்கள் ஆலயத்தின் எல்லா பகுதிகளுக்கும் போகமுடிவதில்லையே, எனவே, சிலுவை இருக்கும் உட்பகுதியை நான் சுத்தம் செய்துகொள்ளுவேன். தனக்கோ எல்லா கடவுள்கள் மேலும் நம்பிக்கை உண்டு என்றும் சொன்னார். நான் பிரசங்கிக்கும் முன்னதாகவே, கோயில்குட்டியார் எனக்குச் செய்த பிரசங்கம் என்னை நொந்துபோகச் செய்தாலும், வந்த வேலையான பிரசங்கத்தை ஆவியானவரின் பெலத்தால் செய்துமுடித்து, ஆலயத்தின் இத்தகைய அவலநிலையைக் கண்டு சோகமான முகத்துடன் வீடு திரும்பினேன். 

 

Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே