Skip to main content

சாத்தியமில்லாதது சாத்தியமானது

 சாத்தியமில்லாதது சாத்தியமானது



2016 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தென்னிந்திய திருச்சபை ஒன்றின் காலை ஆராதனையில் செய்தியளிக்கும்படியாக மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். நாங்குநேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கடந்த பள்ளம் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானேன்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின், பல மாதங்கள் கழித்து, எழுந்து நடமாடும் பெலன் வந்ததும், சேதப்பட்டுக் கிடந்த இருசக்கர வாகனத்தை சரிசெய்ய விரும்பினேன். என்றபோதிலும், அச்சமயம் அதற்கான பணம் இல்லாததினால், அருகிலுள்ள கடைக்கு வாகனத்தை கொண்டு சென்று, எவ்வளவு செலவாகும் என்ற தோராயமான ஒர் மதிப்பீட்டைத் தரும்படி கேட்டுக்கொண்டேன். கடை ஊழியர்களோ,  வாகனத்தை கடையில் விட்டு விட்டுச் செல்லுங்கள், இரண்டு நாட்களுக்குள் மதிப்பீடு தருகிறோம் என்றார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்கள் வாகனத்தின் வேலை முடிந்துவிட்டது, உடனே வந்து எடுத்துக்கொள்ளுங்கள்' என்று மறுமுனையிலிருந்து வந்த குரலைக் கேட்டதும், அதிர்ந்துபோனேன். மதிப்பீடுதானே கேட்டிருந்தேன், வேலை செய்யும்படி நான் சொல்லவில்லையே என்றேன். 'சார், இரண்டு நாட்களாக கடையில் வாகனங்கள் பழுது பார்க்கும் வேலை அதிகம் நடைபெறவில்லை, எனவே உங்கள் வாகனத்தின் வேலையை உடனே முடித்துவிட்டோம் என்று உற்சாகமாகச் சொன்னார் கடை ஊழியர். 

கையில் காசு இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில், நான் 'நிற்பது கூட பிடிக்காமல், காலை வாரி கீழே விழவைத்துதிட்டார்களே' என்று உதறத்தொடங்கிய என் உள்ளத்தின் சத்தத்தை கடைக்காரரிடம் உதடுகள் சொல்லவில்லை. என்றாலும், எவ்வளவு பணம் என்று கேட்டபோது, 11584.00 ரூபாய் என்ற அடி செவியில் விழுந்தது.

சாத்தியமே இல்லை என்பதை அறிந்துகொண்டவனாக, என்ன செய்வது? என்ற கேள்வியே மாத்திரமே மனதில் கேட்டுக்கொண்டு, வீட்டில் படுத்திருந்தேன். 

கர்த்தரின் கைவிரல் எழுத்துக்கள் ராஜாவை கலங்கப்பண்ணினது போல, கடைக்காரர் சொன்ன 11584.00 ரூபாய் என்ற வார்த்தைகள் என்னைக் கலங்கப்பண்ணினது. வாகனத்தை யாரிடமாவது விற்றுவிட்டு, அவர் தரும் தொகையினைக் கொண்டு வாகனத்தை எடுத்து வாங்குபவரிடம் கொடுத்துவிடவேண்டியதுதான் என்ற முடிவினையே என் மனம் இறுதியாக எடுத்தது.

விற்பனை செய்வதற்காக தகுந்த நபரைத் தேடிக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஆனது. கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துவிடுமோ என யோசித்துக்கொண்டேயிருந்தேன். 

அப்போது திடீரென அயல்நாட்டிலிருந்து ஒர் தொலைபேசி வந்தது. மகளுக்குப் பிறந்தநாள், எனவே  யாராவது ஒரு ஊழியருக்கு காணிக்கை கொடுக்க நினைத்தோம், கடைசியாக உங்கள் பெயர் தான் நினைவுக்கு வந்தது, எனவே, இரண்டு நாட்களுக்கு முன் உங்களது வங்கிக் கணக்கில் 12000 ரூபாய் போட்டிருக்கிறோம், கிடைத்ததா? என்று அந்த சகோதரர் என்னிடத்தில் கேட்டபோது, ''பார்க்கவில்லை'' என பதில் சொன்னேன்.

அந்த சகோதரருடன் பேசி முடித்ததும், ATM க்குச் சென்று பார்த்தபோது, ரூபாய் 12000 எனது கணக்கில் வந்திருந்தது. அதனை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றேன். எனது வாகனத்தை மெக்கானிக் ஒருவர் தள்ளிக்கொண்டு வந்து, பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கொடுத்தார். 11584 ரூபாயை கடைக்குக் கொடுத்துவிட்டு, மீதமிருந்த பணத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு வீடு திரும்பினேன். 

'ஆபத்திலும் அவர் ஆயத்தம் செய்பவர் என்பதை என் மனது அன்று புரிந்து கொண்டது.'

Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே