ஒட்டி வந்த அப்பம்
19 மார்ச் 2017 காலை ஞாயிறு ஆராதனை, வேலூர் காந்திநகர் ஆலயத்தில் மனைவி மற்றும் எனது மூன்றரை வயது மகளுடன் பங்கேற்றேன். ஆராதனை நேரத்தில் மகள் அதிகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். திருவிருந்து வேளை வந்தது, மகளது தொந்தரவினால் மனைவி திருவிருந்தில் பங்கேற்காத நிலையில் காணப்பட்டாள். நான் எழுந்து சென்று திருவிருந்திற்காக முழங்கால் படியிட்டேன். போதகர் எனக்கு அப்பம் கொடுக்க முயற்சித்தபோது, அவரது கரத்தில் இரண்டு அப்பங்கள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு வந்தன. அந்த இரண்டு அப்பங்களையும் தனித்தனியாகப் பிரித்து ஒன்றை மட்டும் எனது கரத்தில் கொடுக்க போதகர் முயற்சித்தார், என்றபோதிலும் போதகரால் இயலாமல் போகவே, இரண்டு அப்பங்களையும் எனது கரத்தில் கொடுத்து விட்டுச் சென்றார். பந்தியிலிருந்து நான் எழுந்து மனைவி அருகில் வந்ததும் இரண்டு கிடைத்ததற்கான ரகசியம் புரிந்தது; தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்ற வசனம் விளங்கியது.
கருத்துகள்
கருத்துரையிடுக