Skip to main content

நான் காந்தி !!!

 


நான் காந்தி !!!

ஹவுரா ஸ்டேஷனிலிருந்து சென்னைக்கு குடும்பமாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். இரண்டு வயதே ஆன எனது மகன் இரயில் பெட்டிக்குள் அங்கும் இங்கும் ஓடி ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தான். அவனது சேட்டைகளும், குறும்புகளும் அங்கிருந்தவர்களுக்கு ரசனையாகிக்கொண்டிருந்தன. பலர் எங்களிடம் பேசிப் பழகுவதற்கு எங்களது மகனின் நடவடிக்கைகள் காரணங்களாயமைந்தன. அப்பொழுது ரயில் ஒரிசா மாநிலத்தினுள் பயணித்துக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் ஒரிசா மாநிலத்திலுள்ள ஓர் இரயில் நிலையத்தில் ரயில் நின்றது. இரயில் நின்றதும் பயணிகள் அங்கும் இங்கும் இறங்கி பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர். இரவு நேர உணவை இரயில் பிளாட்பாரத்தில் வியாபாரிகள் பலர் கூவிக் கூவி விற்றுகொண்டிருந்தனர். சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் இரயில் புறப்படத் தொடங்கியது. அப்போது நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியில், எங்கள் இருக்கையின் எதிர் இருக்கையில் புதிதாக அந்த நிலையத்தில் ஏறிய ஒரு பெண் வந்து அமர்ந்தார். ஏறக்குறைய நாற்பத்திரண்டு வயதிற்கான தோற்றம்; சுடிதார் உடை, கையிலே ஒரு சிறிய அலுவலகம் செல்லும் பெண்களுக்கான கைப்பை. ஏறிய அப்பெண் எதிர் இருக்கையில் உட்கார்ந்ததும், உணவு பரிமாறும் ஒரு மனிதனை அழைத்தார்; ஏதேதோ வேகமாக பேசினார். ஹிந்தி மொழியினை நான் அறிந்தவன் என்றபோதிலும் அவர்களது வேகமான உரையாடல்களை எனது காதுகள் உற்றுக்கவனிக்க இயலாத நிலை. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப் பெண்ணுக்கு ஒரு கப்-ல் டீ கொண்டு வந்து தரப்பட்டது. அதற்கு அவர் எந்தப் பணமும் செலுத்தவில்லை. ஒருவேளை கடைசியாகக் கொடுப்பார் என நான் அதனை பொருட்படுத்தவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் எனது மகனின் விறுவிறுப்பான குறும்புகள் அவரையும் எங்களிடம் பேசவைத்தது. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ற அந்தப் பெண்ணின் சுருக்கமான கேள்விக்கு எங்களது உத்தரைவைச் சொல்லி முடித்தபின்னர், நாங்கள் கேட்காமலேயே தன்னை யார் என்று அவர் அறிமுகப்படுத்தினார். தான் இரயில்வேயில் பணி செய்வதாகவும், இரயிலில் கொடுக்கப்படும் உணவுகளை பரிசோதிப்பது தனது கடமை எனவும், தான் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுளைக் கண்காணிக்கும் பரிசோதகர் எனவும் அவர் அறிமுகம் செய்துகொண்டார். பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவினை பரிசோதிக்கவேண்டியவருக்கு, விசேஷித்த உணவு லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதை அப்போது நாங்கள் உணர்ந்துகொண்டோம். 


Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே